பெங்களூரு – கொல்கத்தா இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரைசதம் கடந்திருக்கும் விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை தன் வசப்படுத்தியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவருக்கு ஆரஞ்சு தொப்பி கொடுத்து கௌரவிப்பது வழக்கம். இதுவரை ஹென்ரிக் க்ளாசனிடம் இருந்த இத்தொப்பி தற்போது கோலியிடம் வந்து சேர்ந்திருக்கிறது.