திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமம் கூட்ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று இரவு பெட்ரோல் பங்க் மேலாளர் வரதராஜன், ஊழியர் ராஜசேகர் ஆகியோர் பணியில் இருந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட கார் டீசல் நிரப்புவதற்காக வந்தது. ராஜசேகர் அந்த காருக்கு டீசலை நிரப்பினார். இதனையடுத்து பணத்தை கேட்டபோது காரில் வந்தவர்கள் பேடிஎம்மில் பணம் செலுத்துவதாக தெரிவித்தனர்.

பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் வந்தவர்கள் அங்கிருந்து தம்பி சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து பிடிக்க இயலவில்லை. இதுகுறித்து வரதராஜன் பொன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.