நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி மேரி கியூரி.  இயற்பியலுக்கு ஒன்று,  வேதியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளை பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே. மேரி கியூரியின் இயற்பெயர் மரியா ஸ்கோடோவ்ஸ்கா. இவர் போலந்து நாட்டில் வார்ஷா நகரில் 1867 நவம்பர் 7 அன்று பிறந்தார்.

பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். மரியா பிறந்து வளர்ந்த காலத்தில் ரஷ்யாவிடம் அடிமை நாடாக போலாந்து இருந்தது. பள்ளிகளிலும்,  கல்லூரிகளிலும் பாடங்கள் ரஷ்ய மொழியிலேயே சொல்லித் தரப்பட்டன. போலாந்து மக்களின் தாய்மொழியான போலிய மொழி புறக்கணிக்கப்பட்டது.

மரியாவின் தந்தை தன் குழந்தைகளுக்கு அறிவியலிலும்,  இசையிலும் ஆர்வத்தை ஊட்டியதோடு தாய்நாட்டு பற்றையும்,  தாய் மொழி பற்றையும் ஊட்டி வளர்த்தார். பள்ளி படிப்பின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற மரியா கல்லூரி படிப்பில் சேர்வதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

பிற்போக்கான ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த போலாந்தின் பெண்கள் கல்லூரி கல்வி பெறுவது சிரமம் என்பதை உணர்ந்த மரியா பிரான்ஸ் சென்று பாரிஸில் உள்ள சோர்போன்  பல்கலைக்கழகத்தில் படிக்க நினைத்தார். ஆனால் பொருளாதார நெருக்கடி அதற்கு தடையாக அமைந்தது. தடைகளை  கடந்து 1891இல் மரியா என்பதன் பிரஞ்சு சொல்லான மேரி என்ற பெயரில் சோர்போன்  பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்ட வகுப்பில் சேர்ந்தார்.

1893 இயற்பியலிலும்,  1894இல் கணிதத்திலும் பட்டம் பெற்றார். உடன் ஆய்வு பணிகளில் இறங்கினார். முதலில் இரும்பின் காந்த பண்புகள் பற்றி ஆய்வை மேற்கொண்டார்.  இந்த காலகட்டத்தின் மேரி கியூ என்ற இளம் விஞ்ஞானியை சந்தித்தார்.  இருவரும் வாழ்க்கையை இணையானர். 1895இல் ராஞ்சன் எக்ஸ் கதிர்களையும்,  1896இல் ஹென்றி மோஸ்ட்லி கதிர்களையும் கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து மேரியும் கதிர்களின் வெளியிடும் புதிய வேதி தனிமங்களை கண்டுபிடிப்பதில் இறங்கினார்.  இந்த முயற்சி மேரிக்குரியும் மேரி உடன் இணைந்தார். ஆய்வு கூட வசதி ஏதும் கிடைக்காத நிலையில்,  சோர்போன்  பல்கலைக்கழகத்தின் பழைய சரக்கு அரை ஒன்றை ஆய்வுக்கூடம் ஆக்கிக் கொண்டார். முதலில் கதிர் வீசும் தனிமம் ஒன்றை  கண்டுபிடித்தனர். அதில் யுரோனியத்தை விட அதிகம் கதிர் வீசியது. தாய் நாட்டின் நினைவாக அந்த தனிமத்திற்கு பலோனியம் என பெயர் சூட்டினார்.

மேரி கியூரி இதுகுறித்து ஆய்வு கட்டுரைகள் தான் முதல் முதலாக  கதிரியக்கம்  என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். கதிரியக்க  தனிமத்தின் தேடலைத் தொடர்ந்து,  மேரி அடுத்து இரேனியம், புலோனியம்  ஆகியவற்றை விட அதிக கதிர் வீசும் இன்னொரு தனிமத்தையும் கண்டுபிடித்தார். அதற்கு ரேடியம் என பெயரிட்டார்.

மேரி கியூரியின் கதிரியக்க ஆராய்ச்சிக்காக 193 இல் மேரி கியூரி – ஹென்றி மோஸ்லி ஆகியோருடன் கூட்டாக இயற்பியலுக்கான நோபல் பரிசு தரப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் பெண் ஆனார். 1911 ஆம் ஆண்டு மீண்டும் மேரி கியூரிக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த முறை பொலோனியம் ரேடியம் என்று  புதிய கதிர்களை கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது.

 

மேரி கியூரியின் முயற்சியால் கதிரியக்க ஆராய்ச்சிக்காக பரிஸ் ரேடிய  கழகமும்,  வார்ஷா ரேடிய கழகமும் உருவாகின. மேரி கியூரி – பியர் கியூரி இணையருக்கு ஐரீன், ஈவ் என இரண்டு மகள்கள். இதில் ஐரீன் பிற்காலத்தில் அறிவியலுக்கான நோபல் பரிசு வென்றார். மேரி கியூரி தொடர்ந்து கதிரியக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டதால் கதிரியக்க வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இரத்த புற்று நோய்க்கு ஆளானார். 1934ஆம் ஆண்டு மரணமடைந்தார்.