அயன் லேடி ஆப் இந்தியா என்ற புனை பெயரினால் அனைவராலும் அழைக்கப்பட்டவர் இந்திரா காந்தி. இதனால் அவர் இந்திய ஜனநாயக நாட்டை வழி நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். இது வரையில் இந்தியாவில் பிரதமராக பதவி வகித்த ஒரே பெண்மணி இவர்தான்.

1966 முதல் 1977 வரை மற்றும் 1980 முதல் 1984 வரை அதாவது,  இறக்கும் வரை பிரதம மந்திரி பதவியில் இருந்தார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளான இவர்,  சோகத்தினால் கட்டமைக்கப்பட்ட தனது வளர்ப்பின் காரணமாக தனிமை குழந்தை என வர்ணிக்கப்பட்டார். அவரின் வளர்ப்பு இளம் வயதிலேயே தாயை இழந்த நிலையில்,  தந்தை நேருவும் சுதந்திர போராட்டத்தின் போது அடிக்கடி சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது பெரும்பாலான குழந்தை பருவத்தை வீட்டு பணியாளர்கள் துணையுடனும்,  உண்டு உறைவிட பள்ளிகளிலும் கழித்தார். 1942 ஆம் ஆண்டில் பெரோஸ் காந்தியை மணந்தார்.  பின்னர் அவரது தந்தை பிரதமரான பிறகு அவருக்கு உதவியாக பணியாற்றினார். கட்சியின் அரசியல் சச்சரவில் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டார் இந்திரா.

நேருவின் இறப்பிற்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக பணியாற்றினார். இளம்பெண்ணாக இருந்தபோது இந்திராகாந்தி இந்திய போராட்டத்தில் தனது பங்காக ஒரு குழுவை உருவாக்கினார். அதன் மூலம் காவல்துறையினரை வேவு பார்ப்பதில்,  இந்திய கொடிகளை விநியோகம் செய்தார்.

இதற்காக அவர் 1942 ஆம் ஆண்டு 13 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு வங்காளதேசத்தின் மிக உயரிய விருதான பங்களாதேஷ் ஸ்வாதிநாத சொம்மனோனா என்ற விருது அவரது மரணத்திற்கு பிறகு அவருக்கு அளித்து கௌரவிக்கப்பட்டது.