அரியலூர் மாவட்டத்தில் உள்ள வட வீக்கம் கிராமத்தில் சிவா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர் வங்கியில் பணிபுரியும் நிலையில் கடன் தொகையை வசூலிக்க சென்ற இடத்தில் 35 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் சிவா அந்தப் பெண்ணை வழக்கம்போல் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் அந்தப் பெண் வர மறுத்து விட்டதால் சிவா ஆத்திரத்தில் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பி விட்டார். இந்த வீடியோவை சென்னையில் வேலை பார்த்து அந்தப் பெண்ணின் கணவருக்கு ஒருவர் அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்துள்ளனர்.