ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இன்று அனைத்து துறைகளிலும் மகளிர் விளங்கும் அளவிற்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல. கடந்த 1857 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உழைக்கும் பெண்கள் ஒன்று கூடி குரல் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் தோன்றியது. 1908 ஆம் ஆண்டு வாக்குரிமை கேட்டு பெண்கள் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் போராட்டத்தின் தாக்கம் கண்டு குறைந்தார். போராடினால் தங்களுக்கென உரிமை கிடைக்கும் என்று சிந்தனை உலகம் முழுவதும் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பாக 1919 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி ஜெர்மனி,ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.

இந்த கூட்டத்தில் அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட முடிவு செய்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு வந்த நாட்களில் ஐநா பெண்கள் அமைப்பு சார்பாக அனைத்து உலக பெண்கள் நாள் கடைபிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது..