திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வீரக்குமாரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது 17 வயது சிறுமி ஒருவர் கூட்டத்தில் கச்சேரியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த சிறுமியை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்ற கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையின் போது மோகன் குமார், பாலசுப்பிரமணி, தினேஷ்குமார், நவீன் குமார், நந்தகுமார், சதீஷ், பிரபாகரன் மற்றும் மணிகண்டன் ஆகிய 8 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் இவர்கள் 8 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் 8 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவின்படி 8 பேரும்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அதற்கான நகல் கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.