பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் ஷாருக்கான்னுடன் சேர்ந்து நடித்த பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் தற்போது பாகுபலி புகழ் பிரபாஸ் உடன் சேர்ந்து ப்ராஜெக்ட் கே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது வழங்குவோரின் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனேவின் பெயர் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 12-ம் தேதி 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விருது வழங்கும் விழாவில் விருது வழங்குவோரின் பட்டியலில் இந்திய நடிகையான தீபிகா படுகோனேவின் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் ஆஸ்கர் விருது வழங்கும் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம்பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக தீபிகா படுகோனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.