இலங்கையின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா உள்ளது என இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி கொலம்பியாவில் பிரதான விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பி.முரளிதரன் கலந்து கொண்டார்.

மேலும் இலங்கை அதிபர் ரனில் விக்ரம் சிங்கே, வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இலங்கையின் நம்பிக்கைக்குரிய நாடாகவும் நல்ல நண்பனாகவும் இந்தியா உள்ளது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.