தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் ரோஹித் சர்மா.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டி20ஐ மற்றும் ஒருநாள் தொடர் முடிந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பெரிய தொடர் நாளை தொடங்கவுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டீம் இந்தியா சுற்றுப்பயணத்தின் டி20 தொடரில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்காவை 1-1 என டிரா செய்தது. இதில் முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. பின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 3வது டி20 போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இதையடுத்து கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள்  தொடரையும் 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி தற்போது செஞ்சூரியனில் தொடங்கவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராக உள்ளது. டிசம்பர் 26 (நாளை) முதல் நடைபெறும். இந்த தொடரின் இரண்டாவது போட்டி ஜனவரி 3 முதல் நியூலேண்ட்ஸில் நடைபெறவுள்ளது. 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு வரலாறு படைக்க பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பிசிசிஐ சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கேப்டன் ரோஹித் ஷர்மா வலையில் பயிற்சி செய்வதைக் காணலாம். பிசிசிஐ தனது எக்ஸ் தள பக்கத்தில், டெஸ்ட் தொடருக்கான நேரம் இது, கேப்டன் ரோஹித் சர்மா தயாராக இருக்கிறார்!” என குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவின் சாத்தியமான லெவன் :

ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), ரவீந்திர ஜடேஜா/ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா (து.கே), முகேஷ் குமார், முகமது சிராஜ்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி :

ரோஹித் சர்மா (கே), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (து.கே), பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத் (வி.கீ), அபிமன்யு ஈஸ்வரன்.