இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கொரோனா பாதிப்பு தினசரி 4000 முதல் 5000 வரை இருந்தது. இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 6,000-த்தை தாண்டியுள்ளது.

அதன்படி தற்போது 6050 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட கொரோனா தினசரி பாதிப்பு 6155 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் தற்போது தொற்று பாதிப்பு விகிதம் 5.63 சதவீதமாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 31,194 ஆக உயர்ந்துள்ளது.