லக்னோ-பரவுனி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் வழக்கமான புகாரொன்று, மதுபான கடத்தல் என்ற அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் பயணித்தவர்கள் AC குறைவாக இருப்பதாக புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வில், காற்று குழாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

அதிகாரிகள் 150-க்கும் மேற்பட்ட பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது லக்னோ ரயில் நிலையத்தில் முதல் முறையாக இவ்வாறு கண்டறியப்பட்டாலும், இந்தப் பாதையில் இதற்கு முன்பும் இதேபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. செவ்வாய்க்கிழமை, இரண்டாம் குளிர்சாதனப் பெட்டியில் (A-2) 40-வது இருக்கையில் அமர்ந்திருந்த விபின் குமார் என்பவர் குளிரூட்டல் போதுமானதாக இல்லை என புகார் அளித்ததைத் தொடர்ந்து, புத்வால் நிலையத்திற்கு முன்பு தொழில்நுட்பக் குழுவினர் ரயிலில் ஏறி ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, காற்று குழாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் கண்டறியப்பட்டன. அவை “ஆஃபிசர்ஸ் சாய்ஸ்” விஸ்கி என அடையாளம் காணப்பட்டன. ரயில்வே பாதுகாப்பு படை  மற்றும் அரசு ரயில்வே காவல்துறை ஆகியவற்றின் உதவியுடன், முழு பெட்டியும் ஆய்வு செய்யப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லக்னோ சந்திப்பு RPF ஆய்வாளர் அமித் ராய், கோண்டா அருகே ரயில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதாகவும், 22 மதுபான பொட்டலங்கள் கண்டறியப்பட்டதாகவும் உறுதிப்படுத்தினார். இந்தப் பறிமுதல், மது தடைசெய்யப்பட்ட பீகார் மாநிலத்திற்கு இந்த மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது.

முன்பு மே மாதத்தில், இதே ரயிலில் ஜெனரேட்டர் பவர் கார் பணியாளர் ஒருவரால் 700 டெட்ரா பேக் மதுபானங்கள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையது. மத்தியப் பிரதேசத்தின் ராட்லம் நிலையத்தில், DEMU ரயிலில் இருந்து ₹73,800 மதிப்பிலான 72 பிரீமியம் ஆங்கில மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று சந்தேக நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர், இது ரயில்கள் மூலம் மதுபான கடத்தல் என்ற தொடர்ச்சியான பிரச்சனையை வெளிப்படுத்துகிறது.