தமிழ்நாட்டில் சமீப காலமாகவே சாதி ஆவண கொலைகள் அதிகரித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில் வட மாநிலங்களில் தான் ஜாதி ஆவண கொலைகள் அதிகமாக நிகழும். ஆனால் சமீப காலமாக தமிழ்நாட்டிலும் ஜாதி ஆவண கொலைகள் அதிகரித்துள்ளது.

இது தமிழகத்தில் அவ்வப்போது நடந்திருந்தாலும் கிருஷ்ணகிரியில் தான் அண்மை காலமாக ஆவண கொலைகள் அதிகரித்து வருகிறது. இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உடனடியாக ஆவண கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.