தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக இடையே அடிக்கடி சலசலப்புகள் நிலவி வருகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என டெல்லி மேலிடம் அடிக்கடி கூறி வந்தாலும் தமிழக பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கூட்டணி தொடருமா என்ற ஒரு கேள்வி எழும்பியது.

இந்நிலையில் தற்போது அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததால் அவர் முதல் கட்ட நடவடிக்கையாக டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச இருக்கிறார். வருகின்ற 26-ம் தேதி டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்திக்கிறார். அவரிடம் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி, ஓபிஎஸ் விவகாரம் போன்றவைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்புக்குப் பிறகு அதிமுக-பாஜக கூட்டணியில் ஒரு நிலைப்பாடு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.