பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ரூபி தேவி – நிரஜ் தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த  தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றது. இருப்பினும் நிரஜ் மனைவி முகேஷ் என்ற நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் முகேஷுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரூபியும், முகேஷும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தெரிந்து கொண்ட நீரஜ், முகேஷ் மீது தன்னுடைய மனைவியை கடத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் அவர்கள் குடும்பத்தினரை நேரில் அழைத்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையே இந்த விவகாரத்தை பேசி தீர்ப்பதற்காக இரு குடும்பத்தினரையும் கிராம பெரியோர்கள் அழைத்தனர். ஆனால் அதற்கு நீரஜ் ஒப்புக்கொள்ளாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் முகேஷை பழிவாங்க நினைத்த நீரஜ் முகேஷ் மனைவியை திருமணம் செய்து கொண்டுள்ளார். முகேஷ் மனைவி ரூபி தேவியும் தன்னை ஏமாற்றிவிட்டு சென்ற தன்னுடைய கணவரை பழிவாங்கும் நோக்கத்தில் நீரஜை  திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.