நார்ஃபோக் சத்ரன் கார்ப்பரேஷனின் தலைமை சட்ட அதிகாரியாக இருப்பவர் நபனிதா நாக். இவர் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஷாவுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர். இதனால் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை மீறியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நபனிதா நாக் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டார். இதனால் நிறுவனத்தின் செயல் திறன், நிதி அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் முடிவுகளுடன் தொடர்பில்லாதது என்று அந்நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.