சனாதனத்தை ஒதுக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி பேசியதற்கு  மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்  கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
சனாதனத்திற்கு எதிராக பேசுவோர் எவரும் நாட்டின் அரசியல் அதிகாரம்,  அந்தஸ்தை தக்க வைக்க முடியாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறி இருக்கிறார். சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம்,  கண்ணை நோண்டுவோம் என கடுமையான விமர்சனத்தை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்வைத்திருக்கின்றார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி கூறியதற்கு மத்திய அமைச்சர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.