இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவருமே பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அதிகமாக ஏடிஎம் கார்டு பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் ஸ்மார்ட் போன் மொபைல் ஆப் மூலமாகவே ஷாப்பிங் செய்து பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை முடித்து விடுகின்றனர். இருந்தாலும் ரொக்க பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு மிகவும் அவசியம். ஒரு சில நேரங்களில் ஏடிஎம் கார்டு உங்களிடம் இருந்து திருடப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஒருவேளை ஏடிஎம் கார்டு தொலைந்து விடலாம். இது போன்ற நிலையில் உங்கள் ஏடிஎம் கார்டை உடனே நீங்கள் பிளாக் செய்ய வேண்டும். வங்கிகளுக்கு தெரிவிப்பதன் மூலமோ அல்லது நீங்களாகவே அதனை பிளாக் செய்து விடலாம். ஒருவேளை நீங்கள் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து உங்களின் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஏடிஎம் கார்டை பிளாக் செய்யலாம். இதனைப் போலவே 1800 425 3800 என்ற எண்ணில் புதிய ஏடிஎம் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பித்து விடலாம்.

அடுத்ததாக நீங்களே ஏடிஎம் கார்டை பிளாக் செய்வதற்கு எஸ்பிஐ ஆன்லைன் தளத்தில் உங்களின் நெட் பேங்கிங் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைய வேண்டும். பின்னர் e service என்ற பிரிவின் கீழ் ATM card services என்ற வசதியை கிளிக் செய்து Block ATM card என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு வங்கி கணக்குடன் தொடர்புடைய ஏடிஎம் கார்டு எண்ணை தேர்வு செய்தால் உங்களது கணக்கில் செயல்பட்டு கொண்டிருக்கும் அனைத்து ஆக்டிவ் , இன் ஆக்டிவ் கார்டு விவரங்கள் அனைத்தும் தெரியும். கார்டுகளின் முதல் நான்கு எண்களும் கடைசி நான்கு எண்களும் திரையில் தோன்றும். அதில் பிளாக் செய்ய வேண்டிய கார்டை தேர்வு செய்து நீங்கள் சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி பதிவிட்டு கன்பார்ம் செய்தவுடன் உங்கள் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டு விடும்.