தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழில் பேசுபவர்கள் என்றால் ஏளனமாக பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, விமான நிலையங்களில் கூட தமிழில் பேசுபவர்கள் என்றால் ஏளனமாக நடத்துகிறார்கள். அதன் பிறகு தமிழர்கள் கொல்லப்பட்ட போது எந்த குழுவும் விசாரணைக்காக செல்லவில்லை.

ஆனால் வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக செய்திகள் பரவிய நிலையில் உடனே பீகாரச் சேர்ந்த ஒரு குழு வந்து தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி செய்திகள் பரவியதற்கு பீகாரைச் சேர்ந்த அதிகாரிகள் தமிழக அதிகாரிகளை கேள்வி கேட்கிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு இப்படி ஏதேனும் நடந்தால்  இது போன்று எதுவும் நடக்காது என்று கூறியுள்ளார்.