இயக்குனர் மோகன் ஜி பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தை தொடர்ந்து திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. தற்போது அவர் இயக்கியுள்ள திரைபடம் பகாசூரன். இத்திரைப்படத்தில் செல்வராகவன் ஹீரோவாகவும் நட்டி நட்ராஜ், ராதாரவி உள்ளிட்டோர் முதன்மை வேடத்திலும் நடித்திருக்கின்றார்கள்.

இந்தப் படம் வருகின்ற 17ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இயக்குனர் மோகன் ஜி பேட்டி அளித்திருக்கின்றார். அப்போது அவர் பேசியதாவது, இந்த மாதிரியான ஒரு தோற்றத்தை உங்களுக்கு கொடுத்தேன் என்றால் என்னை சங்கி என்று கூறுவார்கள். உங்களையும் அவ்வாறு சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இது ஏதாவது கொடுக்கும் என்றால் நாம் கதாபாத்திரத்தை மாற்றிக் கொள்ளலாம் சார்.

அப்படியே ரொம்ப சாதாரணமாக சட்டை மற்றும் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு செய்யலாம் என தெரிவித்தேன். ஆனால் செல்வராகவன் கதைக்கு என்ன எழுதி இருக்கிறீர்கள், எப்படி நினைக்கிறீர்கள் அதையே செய்யுங்கள். எதை பற்றியும் யோசிக்காதீர்கள். அதை நான் பார்த்துக் கொள்கின்றேன். அனைத்தையும் கடந்து விடலாம் என தெரிவித்தார். அவர் சொன்னது போல தான் நடந்தது. நான் நினைத்த அளவிற்கு யாரும் தப்பாக பேசவில்லை என தெரிவித்திருக்கிறார்.