சட்ட விரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என காவல் ஆணையர் அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குட்கா, கஞ்சா, கள்ளச் சந்தையில் மது விற்பனை, லாட்டரி போன்ற சட்ட விரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் மூன்றாண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியக்கூடிய காவலர்கள் கண்டிப்பாக பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதோடு தொடர்பில் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக எந்த ஒரு காரணமும் இல்லாமல் அவர்கள்  பணி நீக்கம் தான் என்று கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனிப்படை போலீசார் இதனை கண்காணித்து வருவதாகவும், காவலர்கள் மட்டுமல்லாமல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் வரை இந்த நடவடிக்கை  இருக்கும் இந்த எச்சரிக்கையை நான் முதலாவதாக கூறுகிறேன். இதனை கண்டிப்புடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை பின்பற்றவில்லை என்றால் இரண்டாவது முறையாக எச்சரிக்கையாக இருக்காது அது நடவடிக்கையாக தான் இருக்கும் என்று  தெரிவித்துள்ளார்.