பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவர் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை திவ்யா கர்ப்பமாக இருக்கும்போது அர்னவ் மற்றும் திவ்யா இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அர்னவ் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் என்னுடைய குழந்தையை நேரில் சென்று பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது.

ஆனால் நேரில் செல்வதற்கு பயமாக இருக்கிறது. என் குழந்தையை வீடியோ காலில் காட்டினால் கூட சந்தோஷப்படுவேன். குழந்தையை பார்ப்பதற்கோ அல்லது வளர்ப்பதற்கோ வாய்ப்பு கிடைத்தால் என் குழந்தையை மட்டும் நான் அழைத்துக் கொள்வேன். என் பெற்றோரின் பேச்சை மீறி நான் திவ்யாவை திருமணம் செய்தேன். ஆனால் நான் என்னுடைய பெற்றோரின் பேச்சை கேட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறு எனக் கூறியுள்ளார். மேலும் திவ்யா தன் மீது தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அர்னவ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மனுவை நீதிபதிகள் இன்று ரத்து செய்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.