பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா தொடரில் காமெடி ரோலில் நடித்தவர் நடிகர் சந்திரன். இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மலர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். நடிகர் சந்திரன் அதிக வட்டி கிடைக்கும் என்பதால் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி 35 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்துள்ளார். நடிகர் சந்திரனின் மனைவி வைஷ்ணவி முதலில் 25 ஆயிரம் ரூபாய் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் அதற்கு வட்டி ஒழுங்காக வந்துள்ளது.

இதன் காரணமாக சந்திரன் 35 லட்சம் ரூபாயை கடன் வாங்கி ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து தான் சந்திரன் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால் ஆருத்ரா நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கிய பணத்தை மோசடி செய்த நிலையில் தற்போது சந்திரன் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சொந்த வீட்டில் இருந்து வெளியேறி வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் தற்போது கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருவதாக நடிகர் சந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.