பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் அண்மையில் ஆஸ்கார் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படத்தை தமிழ் படம் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் பலரும் பிரியங்கா சோப்ராவை விளாசி வந்தனர். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தமிழ் படம் என்று கூறியது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் என்ன செய்தாலும் மக்கள் அதில் தவறு கண்டுபிடிக்க நினைக்கிறார்கள். நான் செய்வதை அவர்கள் கொஞ்சம் ரசிக்கவும் செய்கிறார்கள்.

நான் மிகவும் சுதந்திரமாக இருந்தேன். ஆனால் தற்போது எச்சரிக்கையாக இருக்கிறேன். ஏனெனில் தற்போது குடும்பத்தை பற்றி நான் சிந்திக்க வேண்டும். குடும்பம் தான் உயர்ந்தது. நிறைய பேர் எப்போது நான் வீழ்வேன் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் ரசிகர்கள் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எனக்கு மிகுந்த அன்பும், ஆதரவும் இருக்கிறது. மேலும் அதில் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.