தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் மீண்டும் தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மேக்கர்ஸ் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடித்த வாரிசு திரைப்படம் போதிய வரவேற்பை பெறாத நிலையில் மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி வைப்பதாக வந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த முடிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.