தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என நினைப்பில் இருந்த சூர்யாவுக்கு பாலாவின் நந்தா படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சேது என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த பாலா அடுத்ததாக நந்தா படத்தை இயக்கினார். சிவகுமார் தனக்கு நெருங்கிய நண்பர் என்பதால் சூர்யாவை நந்தா படத்தில் ஹீரோவாக்கினார். இந்த படத்தில் லைலா ஹீரோயினாக நடித்திருந்தார். நந்தா படத்தில் ஜோதிகாவை ஹீரோயினாக நடிக்க வையுங்கள் என பாலாவிடம் சூர்யா கேட்டுள்ளார். ஆனால் பாலா என்னுடைய கதைக்கு ஜோதிகா சரிப்பட்டு வர மாட்டார். லைலா தான் கரெக்டாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் சூர்யா தொடர்ந்து ஜோதிகா தான் வேண்டும் என்று அடம் பிடிக்க, கோபமடைந்த பாலா எதுக்கு ஜோதிகாவை கேக்குற அந்த புள்ளைய நீ லவ் பண்றியா என கேட்டுள்ளார். இதை கேட்டவுடன் சூர்யா ஆடிப் போய்விட்டார். சிவகுமாருக்கு சூர்யாவின் காதல் விஷயம் தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால் லைலாவை ஹீரோயின் ஆக்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் சூர்யா. சூர்யா மற்றும் ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதல் முறையாக ஜோடியாக நடித்த போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்து விட்டதாம். மேலும் காக்க காக்க படத்திற்கு பிறகு சூர்யா-ஜோதிகா கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக பலரும் கூறியதால் அதன் பிறகு தான் சூர்யா தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இருவருக்கும் தற்போது திருமணம் ஆகி தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.