தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பாலா. வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்த பாலா தற்போது வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். வணங்கான் படத்தில் நடிகர் சூர்யா கமிட்டான நிலையில் ஏதோ சில காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகினார். சூர்யா படத்தில் இருந்து விலகினாலும் வணங்கான் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என பாலா கூறியிருந்தார். அதன்படி தற்போது அருண் விஜய் வணங்கான் படத்தில் நடிக்க மீண்டும் சூட்டிங் நடந்து வருகிறது.

இந்த படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயினாக கமிட்டாக இருந்த நிலையில் அவரையும் படத்திலிருந்து பாலா நீக்கி விட்டதால் தற்போது ரோஷினி பிரகாஷ் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து வணங்கான் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த தகவலை வைரமுத்து தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு கவிதை மூலமாக தெரிவித்துள்ளார். மேலும் மீடு புகாரில் சிக்கிய கவிஞர் வைரமுத்து தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.