தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இதுவரை வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தோல்வி அடைந்ததே கிடையாது. தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெற்றிமாறனை பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ் சினிமாவில் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் வரிசையில் தற்போது இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் ராம் ஆகியோர் சிறந்த படங்களை கொடுத்து வருகிறார்கள். இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. விடுதலை படத்திற்காக வெற்றிமாறன் காடுமலை என கடுமையாக உழைத்துள்ளார். அவர் மனித வடிவில் இருக்கும் மிருகம். அவர் வெறியில் படம் எடுக்கிறார். அது பாராட்டுக்குரிய விஷயம் என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து சீமான் புகழ்ந்து பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.