தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ஆகஸ்ட் 16 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் அவருடைய தந்தையும் நடிகருமான நவரச நாயகன் கார்த்திக் குறித்து பேசினார். அதாவது கார்த்திக் எந்த ஒரு நடிகரின் உடல் மொழியையும் வைத்துக் கொள்ளாத நடிகர் என்று கூறினார். அதற்கு உதாரணம் நான் தான். என்னிடம் ரஜினி சாரின் சாயல் பாதி தெரியும். நான் அவரின் உடல் மொழியை கொண்டிருக்கிறேன். ஆனால் கார்த்திக் சார் அப்படி கிடையாது. அவர் தனக்கென ஒரு உடல் மொழியை கொண்டுள்ளார் என்று பெருமையாக கூறினார். மேலும் சிவகார்த்திகேயன் சொன்னது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.