செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்ற படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி ,  என்ன பத்தி தெரிஞ்சு தான்… அவரு என்னை திரும்ப… திரும்ப நான் தமிழர் அல்லாதவர்னு விமர்சனங்களை முன் வைக்கிறாரு.  எனக்குன்னு இன்னொரு முகம் இருக்குது. அந்த முகத்தை… இதுக்கு அப்புறம் பார்ப்பீங்க. என்னோட விஸ்வரூபத்தை பாக்க போறீங்க ?

நாங்க அவதூறு பரப்புறோம்னு  நினைச்சீங்கன்னா…. நீங்க நீதிமன்றத்தில் எங்க மேல நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுங்க.  கிரிமினல் கேஸ் போடுங்க. அந்த வழக்கை எப்படி சந்திக்கணும்னு எங்களுக்கு தெரியும் ? உங்கள மாதிரி 10 ஆட்களை விட்டு மெரட்டுற வேலை எல்லாம் எங்களுக்கு தெரியாது. நாங்க சட்டத்தை நம்புறோம்… சட்டத்தை மதிக்கிறோம்… அதனால சட்ட ரீதியா எதையும் எதிர்கொள்ளுங்க….  இப்ப நீங்க நீதிமன்றத்தில் போட்டு இருக்கீங்களா….  நாங்க பார்த்துக்கிறோம்.

நாம் தமிழர் கட்சி  என்னை என்னென்ன வதந்திகள் எல்லாம் பரப்பி இருக்காங்க ? அவங்க என்னென்ன எல்லாம் பேசி இருக்காங்க ?  நீதிமன்றத்தில் என் மீது எத்தனை வழக்கு கொடுத்தாலும்,  தமிழ்நாடு முழுக்க எல்லா காவல் நிலையம்…. எல்லா எஸ்பிஐ ஆபீஸ்களிலும்…. எல்லா  கமிஷனர் ஆபீஸ்களிலும்…. என் மேல் என்ன புகார் கொடுத்தாலும்,  அதை ஃபேஸ் பண்றதுக்கு எனக்கு தில்லு, திராணி எனக்கு இருக்குது என தெரிவித்தார்.