தர்மபுரி மாவட்ட ஆட்சியே சாந்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரூர், கொண்டகரப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம் ஆகிய பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராமப்புற மற்றும் நகர் புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மானிய விலையில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகளின் மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும். எனவே விருப்பம் இருப்பவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தர்மபுரி என்ற முகவரியில் விண்ணப்பிக்க இன்று(வெள்ளி கிழமை) கடைசி நாளாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.