தமிழகத்தில் குறிப்பிட்ட அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் அல்லது ஏதாவது நிகழ்ச்சியின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்துள்ளது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி மார்ச் 13ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு மேற்கொள்வதால் மார்ச் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, மார்ச் 13ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.