துருக்கி நாட்டில் அங்காரா பகுதியில் அமைந்துள்ள இஸ்கென்டருன் துறைமுகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீயினால் கன்டெய்னர்கள் கொழுந்து விட்டு எரிந்து கரும்புகையை வெளியிட்டு வருகின்றது.

இதனை அடுத்து இரண்டாவது நாளான நேற்று தீயை அணைக்கும் முயற்சியில் துருக்கியின் கடலோட காவல் படை கப்பல் முயன்று வருகின்றது. ஆனால் இந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினருக்கு பெரிய சவாலாகவே அமைந்துள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், நிலநடுக்கத்தின் போது கீழே விழுந்த கன்டெய்னர்களால் தீ பற்றியதாக கூறப்படுகின்றது.