இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by 𝐐𝐮𝐛𝐢𝐱𝐍𝐞𝐰𝐬 (@qubixnews)

அதாவது அந்த வீடியோவில் காட்டில் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் ஒருவர் அமர்ந்திருந்து போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிசையின் மீது பாம்பு ஒன்று வந்தது. அந்தப் பாம்பு போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபரின் தலையில் வேகமாக கொத்தியது. ஆனால் அது இளைஞரை ஒன்றும் செய்யவில்லை.

ஏனென்றால் அவர் தலையில் அணிந்திருந்த தொப்பி அவரை காப்பாற்றியது. இதையடுத்து பின்னால் திரும்பிப் பார்த்த வாலிபர் அங்கிருந்து தப்பு ஓடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.