அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எப்ப பார்த்தாலும் திராவிட மாடல்… திராவிட மாடல்.. ஊழல் செய்வதற்கு திராவிட மாடல்…. பெயர் வச்ச பொருத்தமா இருக்கும்…  திராவிட மாடல் எதற்கு ? ஊழல் செய்வதற்கு திராவிட மாடல். கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் இதுதான் தாரக மந்திரம்.  இந்த ஆட்சியில் எல்லாத்துக்கும் கமிஷன் தான். கமிஷன் இல்லாத டிபார்ட்மெண்ட்டே இல்லை. அதனால் தான் இன்றைக்கு நாட்டு மக்கள் வெறுத்துப் போய்… இந்த ஆட்சி மீது கோபம் கொண்டிருக்கின்றார்கள்.

அதை மாற்றுவதற்காக மக்களை திசை திருப்புவதற்காக சனாதானம் என்ற ஆயுதத்தை எடுத்து இன்றைக்கு இந்த நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற நிலையை  பார்க்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கின்றேன். அது மட்டும் அல்ல இன்றைக்கு எல்லா மக்களும்  மதுக்கடையை மூட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..

நம்முடைய இந்த திராவிட மாடல்  ஆட்சி என்ன சொல்றாங்க தெரியுமா? கல்யாணம் நல்லா நடக்க கூடாது. திருமணத்தில் போய் பிராந்தி கடையை வைத்துக் கொள்ளலாம். திருமண மண்டபத்தில் பீர், பிராந்தி வித்துக்கலாம். அங்க திருமணம் நடக்குமா ? குடிச்சிட்டு கலாட்டா தான வரும். எப்படி நல்ல எண்ணம் பாருங்கள்.. இவர்களுக்கு  மூளையில் சிந்திக்கின்ற சக்தி கிடையாது.

பொம்மை முதலமைச்சர். பொம்மை முதலமைச்சர் ஆட்சி பண்ணா இப்படித்தான் வரும். அப்புறம்  நம்முடைய இளைஞர்கள் எல்லாம் போய் விளையாட்டு திடலில்  விளையாடுவாங்க. இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக…. உடலை  திடமாக வைத்துக் கொள்வதற்காக விளையாட்டு மைதானம் போய் விளையாடுவார்கள்…  அங்கு பீர் – பிராந்தி வைத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட அரசாங்கம் ஒரு கேடுகெட்ட அரசாங்கம் இந்த விடியா திமுக ஆட்சியில் தான் பார்க்க முடிகிறது என தெரிவித்தார்.