என் உயிருக்கு அண்ணாமலையால் ஆபத்து உள்ளது என்ற தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். அண்ணாமலை சுமார் 1000 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாகவும் அது தொடர்பாக இன்று காவல் ஆணையரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் வீரலட்சுமி கூறியிருந்தார். இதனை சொன்ன பிறகு எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு அண்ணாமலை தான் பொறுப்பு என்றும் அவர் பேசி உள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் இது பரபரப்பை கிளப்பி உள்ளது.