கர்நாடகா உயர்நீதிமன்றம் பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ரங்கராஜன் என்ற வாலிபர் 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரங்கராஜனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து கர்நாடகா நீதிமன்றத்தில் ரங்கராஜன் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திய தண்டனைச் சட்டம் 376-வது பிரிவின் கீழ் இறந்த பெண்ணின் சடலத்தை பாலியல் பலாத்காரம் செய்வது கற்பழிப்பு குற்றமாக கருதப்படாது என கருத்து தெரிவித்தனர். மேலும் ரங்கராஜனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.