இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவில் சென்னை-மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று கூறப்பட்ட நிலையில், சென்னை-பெங்களூர் வழித்தடத்தில் 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சென்னை மைசூர் இடையை வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி வழக்கம் போல் காலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு 7.13 மணி அளவில் சென்றடையும். இங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு பகல் 12.20 மணிக்கு மைசூரை சென்றடையும். இதேப்போன்று மைசூரில் இருந்து பிற்பகல் 1.5 மணிக்கு புறப்படும் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தை 5.33 மணியளவில் வந்தடையும். பின் அங்கிருந்து கிளம்பி 10 நிமிடங்கள் முன்பாக இரவு 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மேலும் இந்த புதிய நேரம் மாற்றம் வருகின்ற 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.