இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் 17% சம்பள உயர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன. 2022 நவம்பர் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் ஊதிய உயர்வால், 8 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ₹8,284 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.