கொல்கத்தாவில் பஹலா குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக் தாஸ், சமப்தி  தம்பதிகள். அவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ள நிலையில்  41 வயதான கார்த்திக் 28 வயதான தன்னுடைய மனைவியோடு அடிக்கடி சண்டை  செய்துள்ளார் . இந்நிலையில் சம்பவத்தன்று சண்டை முற்றவே தன்னுடைய மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் போலீசிடம்  அழைத்து தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டு வீட்டில் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

கார்த்திக் மற்றும் அவரின் மனைவிக்கு  அன்றும் வழக்கமான சந்தேகத்தால் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் நள்ளிரவு 1 மணியளவில் இந்த சண்டை பெரிதாகி  கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு தன்னுடைய மனைவியின் உடலை மறைத்து வைத்துவிட்டு வீட்டு வேலைகளை செய்து குழந்தைகளுக்கான உணவை தயார் செய்து பள்ளிக்கும் அனுப்பியுள்ளார். அதன் பிறகு மனைவியின் அம்மாவை அழைத்து குழந்தைகளை பள்ளியிலிருந்து  இருந்து கூப்பிட்டுக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதன்பின் போலீசுக்கு தகவல் கொடுத்து தான் வீட்டில் மனைவியை கொன்றுவிட்டு காத்திருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.