இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான கால அவகாசத்தை, மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை கூட அப்டேட் செய்யாதவர்கள் டிசம்பர் 14, 2023-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்திருந்தது.

காலக்கெடு முடிந்த பிறகு அப்டேட் செய்ய வேண்டுமானால் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டு மார்ச் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மைஆதார் தளத்தில் ஆவணங்களை பதிவேற்றி, பயனர்கள் இலவசமாக புதுப்பிக்கலாம்.