ஆதி பராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவை  அடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதேபோல பங்காரு அடிகளாருக்கு அரசு முறை மரியாதை செலுத்தப்படும் என்றும் தன்னுடைய அறிக்கையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.

முன்னதாக உடல்நல குறைவு காரணமாக இன்று மாலை காலமானார் பங்காரு அடிகளார். இதை  தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ச்சியாக அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பல்வேறு புரட்சிகளை உருவாக்கி இருக்கிறார். மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார  அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியதும் அவர்தான். பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்படும் பங்காரு அடிகளால் ஆன்மீகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டவர். ஆதிபராசக்தி சித்தரி பீடத்தில் கருவறைக்குள் சென்று பெண்கள் வழிபாடு நடத்த வழிவகை செய்ததும் பங்காரு அடிகளால் தான்.