இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்குமான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்தையும் கடந்து பதிவாகி வரக்கூடிய  நிலையில், ஹமாஸ் அமைப்பின் இணையவழி பண பரிமாற்றங்களை முடக்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

ஹமாசின் கிரிட்டோ கரன்சி தளத்தையும் முடக்கி  உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. தங்கள் நடவடிக்கைகளால் ஹமாசின் 90% நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் நேற்று இரவு மட்டும் காசாவில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல். இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் 2100 ஐ கடந்து அதிகரித்துள்ளது.