செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்,  நாலரை ஆண்டு காலம் அற்புதமான திறமை மிக்க நிர்வாகத்தோடு,  நல்லாட்சி நடத்திய அகில இந்தியாவிலேயே ஒரு தலை சிறந்த நிர்வாகி..  முதலமைச்சர் என்ற நற்பெயர் எடுத்த மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை பொதுச் செயலாளராக கொண்டு இயங்குகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்த எழுச்சி மாநாடு…

மதுரையிலே நடக்கின்ற எழுச்சி மாநாடு…  தமிழக வரலாற்றிலேயே இதுக்கு முன்னாலும் நடைபெறாத அளவிற்கு ஒரு அற்புதமான மாநாடாக இது அமைந்திருக்கின்றது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 12 – 15 லட்சம் பேர் இந்த மாநாட்டை ஒட்டி,  மதுரையை சுற்றி…. அலைகடலென திரண்டு வந்திருக்கின்ற இந்த நிலை…  அடுத்து நடக்க இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலிலும்….

அதை ஒட்டி நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலிலும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுடைய….  மாண்புமிகு கழகத்தினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடியார் கை ஓங்கி நிற்கும். அவருடைய புகழ் மணக்கும்,  கட்டாயமாக நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி,  அவருடைய தலைமையில் ஆட்சிகள் அமையும் என்ற நிலையை இந்த மாநாடு ஏற்படுத்தியிருக்கிறது என தெரிவித்தார்.