தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் ரிலீசுக்கு பிறகு நடிகர் விஜய் ஆண்டனி திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, பிளாஸ்டிக் விசிறி  மற்றும் போர்வை அடங்கிய பொருட்களை வழங்கினார். அதன் பிறகு நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் பிச்சைக்காரர்களை அழைத்து படம் பார்க்க வைத்ததுடன் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஜய் ஆண்டனி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஆதரவற்றவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு தன் கையால் உணவு பரிமாறினார். இப்படி பல உதவிகளை செய்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். அதாவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுவோர் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி ஆந்திராவில் உள்ள ஒரு மருத்துவமனையுடன் சேர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் ஆண்டனியின் இந்த புதிய முயற்சிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.