தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றில் குரூப் பி குரூப் சி வேலையில் உள்ள 7500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு மே மாதம் 3-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்நிலையில் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. எனவே விருப்பம் இருக்கும் மாணவர்கள் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.