முன்னாள் டிஜிபியும்,  அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவமான நடராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும்,  திமுகவின் அரசு குறித்தும் எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவிட்டதாக பதிவிட்ட புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி வழக்கறிஞர் சீலா அளித்த புகாரின் அடிப்படையில், 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளில் பிணையில் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகள் என தகவல்.