ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி திடீரென பாஜக கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டி சமீப காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் திடீரென டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து தன்னை பாஜக கட்சியில் கிரண் குமார் ரெட்டி இணைந்துள்ளார். மேலும் கிரண் குமார் ரெட்டி பிரதமர் மோடியின் வளர்ச்சி, தேச பாதுகாப்பு ஆதரிப்பதற்காக பாஜகவில் இனிவதாக தெரிவித்துள்ளார்.