வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இருக்கும் பத்தல பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரும் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரமாக மோதிய வாகனம்…. இறந்து கிடந்த பெண் சிறுத்தை…. வனத்துறையினர் விசாரணை…!!
Related Posts
ஸ்கூலுக்கு போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்..? “தந்தையின் கண் முன்னே துடித்து பலியான சோகம்”… நெஞ்சை உலுக்கும் வேதனை…!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராவணன் குட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகணேஷ். இவருக்கு அமரேஷ் (13) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில் சிவகணேஷ்,…
Read moreவீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயம்… சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து மயக்க நிலையில் மீட்பு.. உறைய வைக்கும் சம்பவம்…!!
சென்னை நுங்கம்பாக்கத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில்…
Read more