வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இருக்கும் பத்தல பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரும் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.